New Life Experience

New Life Experience

புது வாழ்வு – தவக்கால தியானம் – 2025

ஆக்கம் : சவேரியார் இன்னாசிமுத்து
திருத்தம் : பெனிட்டா ஜோசப்

இந்த வருட தவக்கால தியானம் ஏழு நாள்கள் (ஏப்ரல் 7-16, 2025)  இரவு 8:30 மணிக்கு Google சந்திப்பு மூலம் நடைப் பெற்றது. திருத் தந்தை திரவிய ரூபன் அடிகள் தமிழகத்திலிருந்து, அதிகாலை துயிலெழுந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தார். ஏப்ரல் 12-ம் தேதி  சனிக்கிழமை காலை திருக்காய வரம் பெற்ற Sr. விமலா அவர்கள்  சேலத்திலிருந்து இணைந்து தன்னுடைய இறை அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்  கொண்டார்கள். 

தியான நாட்கள் (ஏப்ரல் 7-16, 2025)   

தியான நேரம்:  8:30 PM – 9:30 PM (US time) , 7 AM – 8 AM (India Time)

இந்த தியானம் ஏழு அடிப்படை உண்மைகளை விவிலிய மேற்கோள்களோடு விளக்கியது. இந்த அடிப்படை உண்மைகளை அறிந்துக் கொண்டால் நம் கிறிஸ்துவ வாழ்வு சிறக்கும்.  

ஏழு அடிப்படை உண்மைகள் 

  1. கடவுளின் அன்பு 
  2. பாவம் 
  3. இயேசு புது வாழ்வின் மையம் 
  4. விசுவாசம்/ நம்பிக்கை  
  5. பரிசுத்த ஆவி 
  6. சமூகம்  
  7. நிறைவாழ்வு

இந்தக்  கட்டுரையில் இறை வசனங்கள் நீங்கள் தியானிக்க உதவியாக Highlight செய்துக்   காட்டப் பட்டுள்ளது. இறை வசனங்ககளை படித்து தியானிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஏப்ரல் 7, 2025 திங்கட்கிழமை

கழுகு  தன்  இளமையை புதுப்பிப்பது போல நாமும் நம் வாழ்வை புதுப்பிக்க வேண்டும். 

அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.” ( திரு 103:5)

கழுகு தம் இளமையை புதுப்பிக்க பாறையில் மோதி, மோதி  தன்னுடைய பழைய  அலகை, நகத்தை உடைத்து, புதிய அலகையும், நகத்தையும் பெருமாம் . அதுப்  போல நாமும் பழைய வாழ்க்கையை, பாவத்தை உடைத்தெறிய வேண்டும்.

பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும் ( திருத்தூதர் பணி 8:26-39 ) 

திருத்தூதர் பிலிப் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு  , எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு விவிலியத்தை விளக்கியதை, அதனுடைய வரலாற்று பிண்ணணியை விளக்கினார். எத்தியோப்பிய நிதியமைச்சர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், பிலிப்பு அவரை அணுகிய போது , தடுக்காமல் அவரை அனுமதித்து, அவர் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு திருமுழுக்கு பெற்றார். அதுப்போல நாமும் இயேசுவை , பரிசுத்த ஆவியை நம்  வாழ்வில் அனுமதிக்க வேண்டும், நம் வாழ்வை மாற்ற வேண்டும்.  வரும் நாள்களில் ஏழு அடிப்படை ஆன்மிக உண்மைகளை ( Seven Spiritual Truth)  பார்ப்போம்.

ஏப்ரல் 8, 2025 செவ்வாய்க்கிழமை

இன்று நாம் முதல் அடிப்படை உண்மையை  பார்க்க இருக்கிறோம் .

முதல் அடிப்படை உண்மை  கடவுளின் அன்பு:

1.  முதல் அடிப்படை உண்மை கடவுளின் அன்பு: புதிய வாழ்வின் தொடக்கம் கடவுளின் அன்பு. கடவுள் நம்மை அன்பு செய்கிறார், நம்மை வாழவைக்க இயற்கையை படைத்து நமக்கு அளித்தார். கடவுள் நம்மை தனிப்பட்ட முறையில் அன்பு செய்கிறார், ஏனென்றால் அவர் நமது தந்தையாய் இருக்கிறார். எசாயா (43:1-4) வசனங்களை சிந்திப்போம்.

உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்,நீ எனக்கு உரியவன் (43:1)  

இந்த வசனத்திற்கு தந்தையின் அனுபவத்தை பகிர்ந்தார். தந்தை அவர்கள் Zambia வேலை செய்தப்  போது ஒரு சிறு குழந்தையை சந்திக்கிறார், அந்த குழந்தை, “ஹலோ Father”  என்று  அழைத்து  , தன்  பெயரை சொல்லி அறிமுகம் செய்துக் கொள்கிறது. அடுத்த நாள் கோவிலில் அந்த குழந்தையை சந்திக்கிறார், “ஹலோ Father, என் பெயர் சொல்லுங்க ” என்று மழலை குரலில் கேட்கிறது. பாவம் தந்தை அவர்களுக்கு பெயர் மறந்து விட்டது. “ஐயோ மறந்து  விட்டேனே” என்று வருத்தப்பட்டு, “sorry ,sorry , மறுபடியும் ஒருமுறை உன் பெயரை ஞயாபகப் படுத்தும்மா” என்றுக் கேட்டு பெயரை தெரிந்துக்  கொள்கிறார். அடுத்த நாள் அதே குழந்தையை சந்திக்கிறார், இந்த முறையும் அந்தக்  குழந்தை “ஹலோ Father, என் பெயர் சொல்லுங்க ” என்று மழலை குரலில் கேட்கிறது. இந்த முறை தந்தை அவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை, மறுபடியும் மறந்து  விட்டார். “sorry ,sorry , மறுபடியும் ஒருமுறை உன் பெயரை ஞயாபகப் படுத்தும்மா” கெஞ்சுகிறார். அந்த பிஞ்சு குழந்தை முகம் வாடி விடுகிறது. வேண்டா வெறுப்பாக  பெயரை சொல்கிறாள்.  இது நடந்து பல வாரங்கள் செல்கின்றன. ஒரு விழாவில் பங்கேற்க பள்ளிக்கு செல்கிறார். அங்கு நிறைய குழந்தைகளுக்கிடையே தந்தை பெயர் மறந்துப்  போன குழந்தையையும் பார்க்கிறார். அந்த குழந்தை தந்தை அவர்கள் கண்ணில் படமால் கடைசி வரிசையில் மறைந்துக் கொள்கிறார். தந்தை பெயரை மறந்திருப்பார்  என்ற  எண்ணம். அப்போது தத்தை அவர்கள் “Bene, How are  you ? , இங்கே வா!” என்று அழைக்கிறார். அந்த நொடியில் அந்த குழந்தையின் முகத்தில், பிரகாசம், மகிழ்ச்சி, சந்தோசம். அந்த மலர்ந்த முகம் இன்னும் தந்தையின் நினைவில் அகலவில்லை. அந்தக்  குழந்தை ஓடி வந்து தந்தையை கட்டி அனணத்துக்  கொள்கிறது. என்ன ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு!

இதுப்  போன்று, இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்.

அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.  1 யோவான் (4:8)

நம் பணத்தை வைத்து, பதவியை வைத்து, அழகை வைத்து , அதிகாரத்தை  வைத்து கடவுள் நம்மை அன்பு செய்யவில்லை. இவை அனைத்தும் கடவுளுக்கு ஒரு பொருட்டு இல்லை. கடவுள் நம் அனைவரையும் நிபந்தனையற்று அன்பு செய்கிறார். கடவுள் அன்பாய் இருக்கிறார். நம்முடைய குற்றங்களோடு, குறைகளோடு, பலவீனங்களோடு கடவுள் நம்மை அன்பு செய்கிறார். 

ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர் ( எரேமியா 29:11)

மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. ( எசாயா 55:9)

தம்மிடம் இருப்பதை கொடுப்பது இவ்வுலக தந்தையரின் அன்பு, சிறந்ததைக்  கொடுப்பது விண்ணக தந்தையின் அன்பு. 

அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம் (1 யோவான் 4:19)  நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் ( யோவான் 15: 16)

கடவுள் நம்மை முதல் அடி எடுத்து முதலில் அன்பு செய்கிறார். நாம் குழந்தைகளாக மாறி ,கடவுள் நம்மை அன்பு செய்ய அனுமதிப்போம். கடவுளின் கரங்களில் நம் வாழ்வை விட்டுக். நம் வாழ்வில் புதுமைகள் நிகழ கடவுளின் அன்பை அனுமதிப்போம். 

ஏப்ரல் 9, 2025 புதன் கிழமை

இரண்டாவது அடிப்படை உண்மை : பாவம்

முழுமையான நற்செய்தி மட்டும் தான் நமக்கு விடுதலை அளிக்கும். மனிதர்களிடையே  பல்வேறு பிரச்சனைகள்.  பணக்காரன் – ஏழை, சாதி பாகுபாடு,  கருப்பு-வெள்ளை பாகுபாடு. தந்தையின் சக மாணவர் ஒருவர் வெளி நாட்டுக்கு படிக்க செல்கிறார். அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் குளிக்க செல்கிறார். அவர் தண்ணீரில் இறங்கியவுடன் அந்த நாட்டுக்காரர்கள் அனைவரும் நீச்சல் குளத்தைவிட்டு வெளியே  வந்து விடுகிறார்கள். அவமானப் பட்டு நிற்கிறார் குருமாணவர். 

இவ்வளவு துன்பங்களுக்கிடையே, உலக வெறுப்புகளிடையே ,  நாம் கடவுளின் அன்பை உணர முடிகிறதா?   கடவுளின் அன்பை சுவைப்பதற்கு தடையாக இருப்பது எது ?  பாவம் தான்  கடவுளின் அன்பை சுவைக்கத் தடையாக உள்ளது. பாவம் தான் இரண்டாவது அடிப்படை உண்மை. 

ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர் ( உரோமையர் 3:23)

இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். (திருப்பாடல்கள் 51:5)

கடவுளை நம்பாமல்  இருப்பது பாவம், மற்றவைகள்  எடுத்துக்காட்டாக பொய் சொல்லுதல், திருடுதல் பாவச் செயல்கள்.

ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம், ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார். ( தொடக்க நூல் 2:16-17)

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது  ( தொடக்க நூல் 3:1)

கடவுள் எல்லா மரத்து கனிகளையும் உண்ணலாம், ஒரு மரத்தின் கனியை தவிர. ஆனால் சாத்தான்  பெண்ணிடம் “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று பொய்யுரைக்கிறான். போட்டு  வாங்குகிறான். 

பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது ( தொடக்க நூல் 3:4,5)

சாத்தான் பெண்ணிடம் ஆசையை தூண்டுகிறான். கடவுள் சொல்வதை திரித்து சொல்கிறான், பொய்  சொல்கிறான். 

சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். ( யோவான் 8:44)

மேலே உள்ள வார்த்தைகள் சாத்தான் ஒரு பொய்யன் என்பதை ஏசு சொல்கிறார்.

ஐம்புலன்கள் குழந்தைகள் வளர்வதற்கு உதவுகின்றன. சுவை அறிய, தாய், தந்தை , குடும்பம் அறிய, மற்றவர்களை பார்க்க , கேட்க குழந்தைகளுக்கு உதவி அவர்கள்  வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த ஐம்புலன்கள்  தான் நாம் வளர்ந்தப்  பின், நாம் பாவத்தில் விழ காரணம் ஆகின்றன.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான் ( தொடக்க நூல் 3:6)

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது ( உரோமையர் 5:12)

பாவத்தினால் சாவு நம்மைக் கவ்விக் கொண்டது. வாழும் பொழுதே நாம் நடைப் பிணங்களாக வலம்  வருகிறோம். 

பாவத்தால்/சாத்தானால் வருவது பிரிவினை. சாத்தான் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறான், மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறான் , கடைசியாக நம்மிடமிருந்தே நம்மைப்  பிரிக்கிறான். 

நாம் எத்தனை  முறை துன்பத்தில் உழலும் போது கடவுளை  நம்பாமல், கடவுள்  மேல் அவநம்பிக்கை வைத்துள்ளோம்?
மற்றவர்களுடன் பேசாமல் இருக்கிறோமா? மற்றவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுகிறோமா ? அப்படி என்றால் நாம் பாவத்தில் இருக்கிறோம் என்று பொருள்.

திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; ஆனால், நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன். ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன் ( உரோமையர் 7:14) 

ஆனால், அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல. (உரோமையர் 7:17)

இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும், வெண்மையாவேன். (திருப்பாடல்கள் 51: 5-7)

அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார் ( உரோமையர் 7:24,25)

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால், அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே, நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார் ( மத்தேயு 1:21)

இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. ( திருத்தூதர் பணிகள் 4:12)

நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார் (கொலோசையர் 2:14)

இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டும் தான் நம்மை மீட்க முடியும்.

ஏப்ரல் 12, 2025 சனிக் கிழமை

Sr. விமலா தவக்காலத்தில் ஐந்து  திருகாயங்கள்  வரம் பெற்றவர். அவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்  கொள்ள உள்ளார்.  செபிக்காமலிருக்க, கடவுள் அருகில் செல்ல விடாமல், சாத்தான் அவர்களுக்கு அளித்த பல்வேறு சோதனைகளை, துன்பங்களை  விவரித்தார். 

ஏப்ரல் 14, 2025 திங்கள் கிழமை 

மூன்றாவது அடிப்படை மறை உண்மை :  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்இயேசு தான் புது வாழ்வின் மையம்.

இயேசுவின் காயங்களால் நாம் குணம் பெறுகிறோம். பாவிகள் நமக்காக தன்  உயிரைக்  கொடுத்து நம்மை மீட்டார் . தம் உயிர்ப்பால் சாவை அழித்தார் . 

நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார் . (உரோமையர் 4:25)

நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். ( 2 கொரிந்தியர் 5:21)

நம் பாவங்களுக்காக ஆண்டவர் இயேசு மரித்துக்கொண்டே இருக்கிறார். 

சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். (1 பேதுரு 2:24)

இயேசு  நம்மை i) மன்னித்துள்ளார் , ii) குணமாக்கியுள்ளார்  , iii) மீட்டெடுத்துள்ளார், iv) பிரிவினையை நீக்கி கடவுளோடும், மனிதரோடும் நம்மை ஒப்புரவுபடுத்தியுள்ளார்,   

மன்னிப்பைப்  பெற்ற நாம் பிறரை மன்னிக்க வேண்டும், குணமான நாம் பிறரை குணப்படுத்த வேண்டும். விடுதலைப்  பெற்ற நாம், பிறரை விடுவிக்க வேண்டும்.

திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். (யோவான் 10:10)

ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் ( மத்தேயு 5:23-24)

இயேசு கொடுத்த மீட்பை மற்றவர்களுக்கு கொடுக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இயேசு ஒருவரே நம்மை மீட்க வல்லவர். சிலர் இயேசுவை மறந்து, பணத்தை பற்றிக் கொள்கிறார்கள், சிலர் நற்பெயரை பற்றிக் கொள்கிறார்கள்.  நாம்  நம் வாழ்வில் எதை பற்றிக் கொள்கிறோம் ?  இயேசுவையா? இவ்வுலக பணத்தையா , பதவியையா, நற்பெயரையா?

இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. ( திருத்தூதர் பணிகள் 4:12)

அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார் ( மத்தேயு 1:21)

எனவே, இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். (கலாத்தியர் 2:20)

ஏப்ரல் 15, 2025 செவ்வாய்கிழமை 

நான்காவது அடிப்படை உண்மை : விசுவாசம்/ நம்பிக்கை  ( Faith ) 

விசுவாசம் என்பது இயேசுவை நம்புவதற்கும் அவரை ஒரே மீட்பராக ஏற்றுக்கொள்வதற்கும் நாம் எடுக்கும் முடிவு. 

நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. (எபேசியர் 2:8)

ஆபிராகம் விசுவாசத்தின், நம்பிக்கையின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.  விசுவாசம் நாம் எடுக்கும் ஒரு முடிவு, விசுவாசம் ஒரு அனுபவம், விசுவாசம் நம் வாழ்க்கையில் ஒரு மாற்றம்.

ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு, உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். (உரோமையர் 10:9-10)

இயேசுவே நம் மீட்பர் என்று நம்புகிறோமா? மீட்படைய நாம் இயேசுவை நம்புவோம். 

ஐந்தாவது அடிப்படை உண்மை :  பரிசுத்த ஆவி

இயேசு விண்ணகம் சென்றப்  பின், பரிசுத்த ஆவியை கொடையாக  நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.  பரிசுத்த ஆவி நம் இதயத்தை மாற்றுகிறார், நம் வாழ்வை மாற்றுகிறார். நம்மை இயேசுவின் சாட்சியாக மாற நமக்கு திடனை அளிக்கிறார்.. 

நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)

இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் ( லூக்கா 24:29)

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. (உரோமையர் 5:5)

அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால், தூய ஆவியார் ஒருவரே. (1 கொரிந்தியர் 12:4)

ஏப்ரல் 16, 2025 புதன் கிழமை 

ஆறாவது அடிப்படை உண்மை :  சமூகம் ( Community)

கிறிஸ்துவ சமூகம் கிறிஸ்துவின் உடல். இயேசுவின் ராஜ்யத்தின் முதல் கனி சமூகம்.   

தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். (யோவான் 11:52)

1 கொரிந்தியர் 12 அதிகாரம் நம் உடல் உறுப்புகளை கிறிஸ்துவ சமூகத்துக்கு ஒப்பிட்டு நாம் வெவேறு இனத்தவராயினும், மொழியினராயினும் ஒன்றுப்பட்டு செயல்படுவதின் அவசியத்தை விளக்குகின்றன. 

1 கொரிந்தியர் 13 அதிகாரம் வாழ்வின் அன்பின் அவசியத்தை விளக்குகின்றன.

இயேசுவால் இரட்சிக்கப் பட்ட நாம், கிறிஸ்துவ சமூகமாக வாழ்வது அவசியமாகிறது. நாம் நம் சகோதர, சகோதாரிகளுடன் இணைந்து  வாழ்ந்தால் தான், கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறோம் என்றுப்  பொருள். இல்லையென்றால் நாம் ஒரு பொய்யான  வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறறோம்.

ஏழாவது அடிப்படை உண்மை :  நிறைவாழ்வு ( Eternal Life)

நம் வாழ்வின்  நோக்கம் நிறைவாழ்வை, விண்ணக வாழ்வை அடைவது. அதற்கான  வழி  இயேசுவை நம்புவது தான்.  நிலைவாழ்வு அடைவதற்கான வழியை, பின் வரும் விவிலிய வாசகங்களை படித்து தியானிப்போம்.

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். (யோவான் 11:25)

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன் ( யோவான் 6:54)

எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.✠

 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ( மத்தேயு 28:19-20)

நன்றி !!

இந்த தியானத்தின் சில பகுதிகள் youtube-ல் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

Vacation Bible School 2026 – Foundation in God

Vacation Bible School 2026 – Foundation in God

by Venista Dharmaraj

Hosted by the RTP Tamil Catholic Association, the 2026 Vacation Bible School welcomed 53 students from Kindergarten through 12th grade for a joyful week of faith-filled learning, fellowship, and fun under the theme “Foundation in God.” Through Scripture, prayer, songs, crafts, and interactive activities, the children learned that God created us, Jesus is our Savior, the Holy Spirit is our guide, forgiveness brings healing, and God’s blessings follow those who strive to live like Christ.

The VBS program was organized into:

  • Four Elementary School classes, focusing on Creation, Salvation, the Holy Spirit, Faith, and Forgiveness.
  • Three Middle School classes, exploring God’s Power, the Resurrection of Jesus, the Holy Spirit, Forgiveness, and the Beatitudes.
  • One High School class, encouraging deeper reflection on Scripture, Christian discipleship, and living out the Gospel in everyday life.

To build identity and community, each class was named after inspiring biblical figures. The Elementary classes were John, Peter, Matthew, and Luke; the Middle School classes were Jonah, Daniel, and Elijah; and the High School class was Enoch.

Throughout the week, students explored Bible stories, memory verses, and real-life applications that deepened their understanding of God’s love and encouraged them to build their lives on the firm foundation of Christ. They grew in biblical knowledge, faith, character, friendship, and a desire to follow Jesus each day.

The week concluded with a joyful Grand Finale on Saturday, June 20, 2026, at Holy Cross Catholic Church, featuring performances, crafts, memory verse recitations, a pizza party, and special gifts and prizes for all the children.

by Nirmaala Francis

Heartfelt thanks to Venista for leading VBS 2026 for the second consecutive year. We truly appreciate your dedication and hard work in making VBS a meaningful experience for our children.

A special thank you to our teachers—Auxilia, Benita, Crescenta, Mano, Maria, Mary, Raji, and Susan—and to our Board representatives, Mike and Monicka, for your commitment and support.

Sincere thanks to all our volunteers for making VBS 2026 a wonderful success. God bless all our RTPTCA families!

2026 RTPTCA Lenten Retreat

2026 RTPTCA Lenten Retreat

The 2026 RTPTCA Lenten Retreat was held on March 14, 2026, at Holy Cross Catholic Church, Durham, under the theme “Step Forward into a Deeper Connection with God.” The day brought our community together for prayer, reflection, and renewal. For the first time in RTPTCA, distinct Leadership, Family, and Women’s Retreats were held, allowing each group to reflect on its unique calling and responsibilities.

Leadership Retreat
The Leadership Retreat, the first of its kind for RTPTCA board members, began with a hymn and prayer invoking the Holy Spirit. Centered on Stewardship, Fr. Vimal Backyaraj reflected on the Parable of the Talents (Matthew 25:14–30) and reminded the ministry leaders that they are not owners, but faithful stewards of God’s mission. He urged them to care responsibly for the organization’s mission and resources so they may serve future generations.

Father emphasized servant leadership, leading by example, collaborative decision-making, unity, and mutual trust. He reminded participants that effective leadership depends not only on vision and strategy, but also on humility, integrity, and character.

He concluded with the words:
“Yesterday is history, tomorrow is a mystery, and today is God’s gift.”

He challenged everyone to use that gift wisely and reminded us that we are all merely “karuvi” (tools) in God’s hands. God’s work will continue through His people—if not through us, then through someone else.

Family Retreat
The Family Retreat focused on reconciliation with God and the transforming power of His Word. Fr. Vimal reminded families that sin weakens our relationship with God and that we can discern His will only by spending time in His presence through prayer and Scripture.

He called everyone to seek God’s forgiveness, forgive one another, and become living examples of faith for their children. Through Scripture, the witness of the saints, and prayer, families were reminded that God’s Word heals, transforms, and brings lasting peace to receptive hearts.

A powerful reminder echoed throughout the retreat: our children learn not only from what we teach them, but from the lives we live every day.

Women’s Retreat
The Women’s Retreat, the first of its kind in RTPTCA, was embraced with great enthusiasm and became a deeply meaningful experience for all who attended.

Fr. Vimal reflected on the glory of Mount Tabor, where Jesus was transfigured before His disciples in the presence of Moses and Elijah, and the Father’s voice proclaimed, “This is my beloved Son.” He then led the women to Calvary, where the same Lord, wounded and rejected, prayed, “Father, forgive them, for they know not what they do.”

By connecting these two sacred moments, Father reminded everyone that true glory is never separated from sacrifice. He also reflected on the unique vocation of women as the heart of the family—called to nurture faith, preserve unity, and pass Christian values to the next generation.

The retreat offered women a grace-filled opportunity to place their concerns about children, family life, and daily responsibilities before God, and to face life’s challenges with wisdom, patience, hope, and faith.

The 2026 Lenten Retreat became a memorable milestone for RTPTCA, inspiring every participant to grow closer to God, deepen their faith, and renew their commitment to serve Christ, their families, and the community with joyful hearts!

Cook and Serve Those in Need

Cook and Serve Those in Need

Location : 5110 Revere Road, Durham, NC
1501 Sima Avenue, Durham, NC
Date : On June 28, 2026 Sunday between 1 PM to 5 PM

Lead Volunteer: Samuela Christoper

Youth Volunteers: Innila Akilan, Jebin Rousseau, Mahilan Irudaya, Mahilan Pancras, Nora Marquies, Rishe Sylesh, Samuela Christopher, Thiran Raja

Adult Volunteers:  Benitta Joseph,Caroline Pancras,Divya Sylesh, Monicka Kingsley, Monicka Raja ,Prabha Vijay , Nandhini Akilan, Raji Adarsh , Roussseau Arulsamy, Savariyar Innasimuthu

Write-up by Samulea Christoper

This past Sunday was an incredible display of teamwork, dedication, and compassion. Thanks to the hard work of 15 amazing youth and adult volunteers from RTPTCA, we successfully prepared and distributed 100 chicken burgers to community members in need.
Here is a look at how the afternoon unfolded:
🍔 1:00 PM – 3:00 PM | Preparation at Zakat Foundation Center
5110 Revere Road, Durham
Preparing 100 fresh meals on a tight schedule is no small feat, but the RTPTCA team tackled the kitchen with incredible efficiency:
Prep Work: Creating labels and preparing fresh lettuce.
The Grill: Keeping up with the heat to grill both the chicken patties and the buns.
The Finish: Assembling the burgers and carefully packaging them for safe travel.
🚗 The Drive: A Meaningful Mission
During the drive, we learned that this burger might be the only meal of the day for some of the people we were serving. It was a powerful reminder of how much a simple meal truly matters.
📦 3:00 PM – 5:00 PM | Distribution at McDougald Terrace
1501 Sima Avenue, Durham, NC
Upon arrival, the team quickly set up tables and organized the food for a smooth distribution.
The Meal: Each person received a hot chicken burger, a mini bottle of water, and a bag of Lay’s chips.
The Impact: We served a steady stream of grateful individuals, many of whom were collecting additional meals to take home to their families.
A Heartfelt Thank You!
This event was a powerful reminder that small acts of kindness leave a lasting impact. A massive thank you to the 15 RTPTCA volunteers who gave up their Sunday afternoon to make a meaningful difference in our Durham community. We couldn’t have done it without you!

Durham Crop Walk – RTPTCA’s first!

Durham Crop Walk – RTPTCA’s first!

by Maria Christopher

RTPTCA joined the 52nd Annual Durham CROP Hunger Walk on March 29, starting at Duke Chapel—marking our first-ever participation in this meaningful event!

Through Church World Service, the walk supports organizations like Meals on Wheels and Urban Ministries of Durham.

A special thanks to Lazar for initiating this, and to everyone who contributed and joined the walk.

Did you know that over 34 million people in the U.S. face hunger—1 in 10 people, including 1 in 7 children? Just $3–$4 can feed one person for a day. Small acts of generosity truly make a big difference.

It was a walk of purpose, unity, and compassion—every step bringing us closer to hope and a hunger-free tomorrow. As Dr. Martin Luther King Jr. said,

“The time is always right to do what is right.”

Womens Day Walk – Mar 2026

Womens Day Walk – Mar 2026

23! 5.4! 12,000!

On March 7, 2026, 23 amazing women in white came together for an International Women’s Day walk at Apex Community Park!

5.4 miles, 12,000 steps—full of energy, laughter, friendship, and perfect weather.

The celebration ended with a delicious lunch at Chris’s Truck.

A big shout-out to Monicka, Secretary RTPTCA, for organizing this wonderful Women’s Day walk.

“Here’s to strong women: may we know them, may we be them, may we raise them.”

Volunteering at Holly Springs Food Cupboard

Volunteering at Holly Springs Food Cupboard

Location : 621 W Holly Springs Rd, Holly Springs, NC 27540
On March 07, 2026 Saturday between 9 AM to 11 AM

Lead Volunteer: Evelyn Jinu
Youth Volunteers: Adira, Eugene, Jebin, Thiran,
Adult Volunteers: Adarsh, Jayarani, Sneha, Savariyar

Volunteer Experience at the Holly Springs Food Cupboard By- Evelyn Jinu

Volunteering at the Holly Springs Food Cupboard from 9:00 to 11:00 a.m. was a truly meaningful and eye opening experience. The staff welcomed us warmly and explained the tasks for the day, beginning with work in the community garden. We were given green onion seedlings to plant in the garden beds, and the boys (Eugene, Thiran, and Jebin) joined me and along with the adult volunteers in planting the seedlings, watering them with fertilizer, and finally sowing turnip and radish seeds. It was inspiring to see how even small actions in the garden help provide fresh, healthy food for families in need.

After the garden work, we moved in to help prepare collard greens for distribution. Together, we washed, sorted, and peeled the greens, carefully picking out the best leaves and filling 25 labeled bags for families who had pre booked their food through the sign up system. This part of the work helped us understand how much care and organization goes into making sure each family receives quality produce.

The employees thanked us for our help and even took a group picture to remember the day. Learning that the food cupboard has been serving the community for about 13 years made the experience even more meaningful. It reminded all of us that volunteering, teamwork, and simple acts of service can make a real difference in people’s lives.

Overall, this experience taught us the value of working together, helping others, and appreciating the effort that goes into supporting our community.

10th Annual General Body Meeting – Feb 2026

10th Annual General Body Meeting – Feb 2026

RTPTCA held its 10th Annual General Body Meeting on 15th February 2026, attended by 30+ member families, reflecting strong participation and community spirit.

The meeting opened with prayer and hymn led by Rev. Fr. Arul Yagappan and was coordinated by the Secretary, Sebastian Periyanayagam. Meeting minutes were recorded by Jeyaraj Kanagaraj, Board Director. Monicka Raja Board Director delivered the welcome address, followed by the 2025 Year Review presented by the President, Nirmaala Francis.

In her address, the President reflected on Jesus’ call to be the light of the world and the salt of the earth, emphasizing that the association’s focus is not on the size of events but on growing closer to God each year. She thanked all volunteers, members, and priests for their faithful service and echoed the words of Mother Teresa:
“My work may be just a drop in the ocean, but the ocean would be less because of that missing drop.”
She affirmed that all achievements of the past year are by God’s grace and that all glory belongs to Him.

The financial statement was presented by the Treasurer, Christopher Mangalanathan. Jeyan Pushparajan felicitated the outgoing board members Chris and Sebastian for their dedicated service.

The Vice President, Savariyar Innasimithu, inducted Michael Jesudoss and Susai Savarimuthu to the 2026 Board. The meeting concluded with an interactive Q&A session and a vote of thanks delivered by the Vice President.

Dorcas Ministries Food Donation Drive

Dorcas Ministries Food Donation Drive

Lead Volunteer: Noah Joseph

Youth Volunteers: Anaya Susai, Angelina Peter, Ashik Favio Jose, Asvika Amalrajan, Eugene Vijayan, Joel Jayan, Mahilan Patrick, Riana Austin, Riana Richard, Rishika Jayaraj , Samuela Christopher, Thiran Raja

Adult Volunteers: Caroline Patrick, Benitta Joseph

Write-up By: Benitta Joseph

Our church community recently came together for a meaningful volunteering program to support Dorcas Ministries. Caroline organized the effort by sending out a sign-up sheet for food donations, inviting both adults and youth to participate. The response was heartwarming, as many families eagerly signed up to contribute.

Noah served as the Youth Lead for this program, helping coordinate the collection of items. To make it convenient for everyone, both adults and youth dropped off their donations at Noah’s house. Over the weeks, generous contributions filled the space — including peanut butter, flour, sugar, oil, soup, noodles, as well as gently used clothes and shoes.

Although our original drop-off date had to be postponed due to a snowstorm, the delay did not dampen our spirits. Once the weather cleared, we were finally able to deliver all the donated items to Dorcas Ministries.

This volunteering program not only provided essential supplies to families in need but also strengthened our sense of community and teamwork. It was a wonderful example of youth leadership, service, and generosity in action.

Donated Items: Sugar, Flour, Vegetable Oil, Chicken noodle, Tomato Soup, Jiffy Cornbread Mix, Pasta Sauce, Pancake Mix & Syrup, Black Bean Bag, Peanut Butter, Canned Peas, Canned Beans, Canned Fruits, New and Gently used clothes, Kids shoes

Volunteering at BellaRose Nursing Home

Volunteering at BellaRose Nursing Home

Date: Dec 13th, 2025 Saturday between 10:30 AM – 11:30 AM at  200 BellaRose Lake Way, Garner, NC 27529

Youth Volunteers: Amizhtha Mani, Amuthan Mani, Anaya Susai, Angelina Peter, Asvika Amalarajan, Chrishan Michael, Eugene Vijayan, Evelyn Jinu, Johan Leo, Johanna Vijay, Lauren Xavier , Nora Marquies , Riana Austin, Rishika Jayaraj, Samuela Chris, Tennie Jeyan

Write-up By: Tennie Jeyan

We were blessed with an incredible opportunity to volunteer at BellaRose Nursing Home, a long-term care facility for the elderly. As we walked in, we were filled with anticipation, ready to share what we had been practicing and preparing for over a month. The residents slowly gathered, eagerly awaiting our performance. We were given an hour to entertain them and bring Christmas joy, so we presented dances, carols, and even a puppet show that had been carefully prepared for weeks.

Our program began with a set of festive Christmas carols led by Mr. Jeyan Pushparajan along with our youth. We could see the happiness on the residents’ faces as they clapped and sang along to the familiar tunes. Mrs. Maria Gnanspragasam dressed up as Santa Claus, which brought even more laughter as she walked around greeting residents, shaking hands, and spreading cheer. I was even pulled aside and asked when we were going to sing again — a simple question that showed just how much they enjoyed it.

Next, we performed a joyful musical dance depicting the Nativity story, choreographed by Mrs. Genrose Hirudayaswamy. The dancers beautifully brought the story of Christmas to life in a way that was both meaningful and entertaining.

Then we presented a Bharatanatyam dance, choreographed by Mrs. Maria Gnanspragasam, which was truly divine to watch. The dancers gracefully shared the beauty of our culture and heritage.

After that, Evelyn Jinu delivered a heartfelt message reminding us of the true spirit of Christmas — love, compassion, giving, and being present for one another.

We then performed an Indian folk dance choreographed by Mrs. Nancy Mani. This lively performance was full of color, rhythm, and energy. The dancers’ bright costumes and joyful movements filled the room with excitement.

Finally came the showstopper: a hilarious and lively puppet show curated by Mrs. Caroline Patrick. It illustrated a funny Christmas family moment and was filled with dances and laughter, making it the perfect ending to our program.

As the event came to an end, some of us helped escort residents back to their rooms. Although finding the right rooms was a bit challenging, it became one of the most meaningful parts of the day. As we walked with them, they shared stories about their lives, families, and cherished memories. Many told us how much they enjoyed our performances. These conversations reminded us that sometimes the smallest gestures create the greatest impact.

Happy New Year 2026!

Happy New Year 2026!

-Nirmaala Francis, President

Dear RTPTCA Families,
We are deeply thankful for your support this past year—through your contributions, volunteering, and participation! Your prayers and involvement mean so much.

Thank You, Lord, for blessing us in 2025. We pray for continued blessings for all RTPTCA families and their loved ones in 2026. Let us continue to keep our focus on Him, His glory, and the wonderful plans He has for us.

“For I know the plans I have for you,” declares the Lord, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.” — Jeremiah 29:11

Wishing you all a very blessed and joyful New Year 2026!