We met Raleigh Bishop Most Rev.Luis R. Zarama on March 26, 2019.

Some of his Wisdom of words to us.
Two things only you can do in your mother tongue
1. Prayer
2. Mental Math
So you are doing a great job to your community
We met Raleigh Bishop Most Rev.Luis R. Zarama on March 26, 2019.

Some of his Wisdom of words to us.
Two things only you can do in your mother tongue
1. Prayer
2. Mental Math
So you are doing a great job to your community
ஆக்கம் : அந்தோணி ஜெயராஜ்
RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் வருடாந்திர கிறிஸ்துமஸ் பெருவிழா இந்த வருடம் 2018, டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் பாடகர் குழுவினர், சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்து பிறப்பு குறித்து பாடல்களைப் பாடி கிறிஸ்து பிறப்பு பெருவிழா மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
சிறு சிறு குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் திரு சவேரியார் அவர்களும் திரு ஜெயராஜ் அவர்களும் ஒருங்கிணைத்து தந்தார்கள். குழுக்களின் விவரம்,
உள் மற்றும் வெளி அலங்காரம் – திருமதி. ராணி, திருமதி. தீபா, திரு.ஜோன்ஸ் & திரு. ஆதர்ஷ்;
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு -திருமதி. வித்யா & செல்வி.ஜெசிக்கா;
திருப்பலி ஒருங்கிணைப்பு – திரு. பவுல்;
ஒலி ஒளி அமைப்பு – திரு. ஜோசப்;
கலை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கல் – திருமதி. ரூபா;
இரவு உணவு ஏற்பாடு – திரு. சதீஷ் & திரு. கிங்ஸ்லி;
இருக்கைகள் ஏற்பாடு – திரு. ஜெரார்ட் & திருமதி. ஆக்ஸிலியா;
விழாவிற்கு பின் சுத்தம் செய்தல் – அனைத்து உறுப்பினர்கள்.
விழாவானது பிற்பகல் 3 மணி அளவில் ஆடம்பர பாட்டு திருப்பலியுடன் ஆரம்பமானது. திருப்பலியினை தந்தையர்கள் அருட்பணி ஞானப்பிரகாசம் அவர்களும் அருட்பணி பிரவீன் அவர்களும் சிறப்புடன் நடத்தினார்கள். பாடகர் குழுவினர் திருப்பலியில் இனிமையான பாடல்களைப் பாடி பாலன் இயேசுவை போற்றிப் புகழ்ந்தார்கள்.
சிறிய தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகள் சங்கத்தலைவர் திரு லாசர் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிகளை திருமதி ரூபா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளும் அவற்றை வடிவமைத்து வழங்கியவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு.
குழந்தைகள் நடித்த கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் தொகுப்பு – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்கள் இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
சிறுவர்களின் பியானோ இசை – ரியா & ரெய்லன் கிங்ஸ்லி .
குழந்தைகளின் நடனம் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
குழந்தைகளின் கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி. ராணி & திருமதி. ரூபா.
இளைஞர்களின் நடனம் – திருமதி. நிர்மலா & திருமதி. கோல்டா.
பெரியவர்கள் இசையோடு இணைந்து பாடிய கிறிஸ்மஸ் பாடல்கள் – திருமதி.
சூசன் & திரு ஜெரார்ட்.
இளைஞர்கள் இசையோடு இணைந்து பாடிய இசை நிகழ்ச்சி – திருமதி. வித்யா.
ஆடை அலங்கார அணிவகுப்பு – திருமதி. நிர்மலா & திருமதி. ராஜி.
ஆண்களின் இசையோடு இணைந்த குழு பாடல் – திரு. சவேரியார் & திரு. ஜெயராஜ்.
பெண்களின் நடனம் – திருமதி நிர்மலா & திருமதி ராஜி.
இளம்பெண்களின் கதம்ப நடனம் – செல்விகள் ஜெசிக்கா, ஹேனா, சாரா & ஷெரின்.
வேதாகம வினாடி வினா நிகழ்ச்சி – திரு. ஜெயராஜ்.
செயலாளர் திரு சவேரியார் அவர்கள் நன்றி கூற கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. அதன் பின் அறுஞ்சுவை விருந்து பரிமாறப்பட்டது. அத்துடன் விழா இனிதாக நிறைவு பெற்றது. இந்த வருட விழாவின் மகிழ்ச்சி தரத்தக்க நிகழ்வு என்னவென்றால் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து அனைவரும் எல்லா நிகழ்வுகளிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு கலந்து கொண்டார்கள். அருள் தந்தை பிரவீன் அவர்கள் தன் உரையில், அவர் வீட்டையும், நாட்டையும் பிரிந்து வாடியதாகவும், இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் அவர் தன் சொந்த மண்ணுக்கு சென்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததாகவும் கூறினார். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த நிகழ்வுகள் இறைவனால் உந்தப்பட்ட நிகழ்வுகளாகவே நாம் எடுத்துக்கொள்ள முடியும். இதே அர்ப்பணிப்பு உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
During Christmas season, every year, the RTP Tamil Catholic Choir brings the Christmas cheer to every member’s house. In 2017, they visited the houses of around 15 members in Cary, Apex, Morrisville, Raleigh, Clayton, Durham, Chapel Hill and Martinsville in Virginia.
The choir also brought cheer to the parishioners of St. Joseph’s Church in Eden. The following is a video recording of some of the songs they sang. Enjoy!
Text by Savariar. Photos by Joseph.
RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கத்தின் சார்பாக, 2017 கிறிஸ்து பிறப்பு நாள் மிக விமரிசையாக கொண்டாடப் பட்டது. இந்த வருடம் கிறிஸ்து பிறப்பு விழாவை வழக்கம் போல, கிறிஸ்துமஸ் carol-யுடன் ஆரம்பித்தோம். carol-க்கு எத்தனை குடும்பங்கள் விருப்பமாக உள்ளனர் என்று அறிய, google-form மூலமாக கணக்கெடுத்தோம். திரு. ஜோசப் அவர்கள் google form-ஐ வடிவமைத்துக் கொடுத்தார்கள். இந்த முறை 24 குடும்பங்கள் carol team-ஐ தங்கள் வீடுகளுக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நான்கு நாள்கள் carol செய்வதாக முடிவெடுத்தோம். இந்த வருடம் திருவருகைக் காலம் டிசம்பர் 3-ம் தேதி தொடங்கியது, எனவே carol-ஐ டிசம்பர் 7,2017 வியாழன் தொடங்கி டிசம்பர் 10,2017 ஞாயிறு வரை செய்ய
முடிவெடுத்தோம். திருமதி. Golda அவர்களும், திரு. குமார் அவர்களும் carol பாடல்களை தேர்ந்தெடுத்தார்கள், பல்வேறு வேலைகளுக்கிடையிலும் carol பயிற்சி எடுத்தோம். எல்லா வீடுகளிலும் எங்களை சிறப்பாக வரவேற்றார்கள். இந்த வருட carol உறுப்பினர்கள் திரு.சவேரியார், திரு.அந்தோணி, திரு.வின்சென்ட் குமார், திருமதி. கோல்டா மெர்லின், திருமதி. தீபா, திருமதி. லூர்து ஜெயராணி.
டிசம்பர் 17,2017 ஞாயிறுக் கிழமை கிறிஸ்து பிறப்பு திருவிழா . இந்த வருட நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு திரு.அந்தோணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. காலை 9 மணிக்கு Cary -யில் உள்ள Twin Lake Clubhouseஅலங்கரிக்க தொடங்கினோம். திரு.சவேரியார், திரு.லாசர், திரு.அந்தோணி, திரு.ஜோசப், திரு.அஜி, திரு.ஆதர்ஷ், திரு. குமார், திரு.விவேக் குடும்பத்தினர் வந்து அலங்கரித்தனர். லாசர்-தீபா குடும்பத்தினர் அலங்கார குழுவிற்கு தேநீரும், சிற்றுண்டியும் தந்து தெம்பூட்டினர். மாலை 3:30 மணிக்கு செபமாலையுடன் திருவிழா ஆரம்பித்தது. இந்த வருட
திருப்பலியை அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளாரும், அருள்திரு. லூர்துராஜ் அடிகளாரும் இனைந்து நிறைவேற்றினார்கள். டேவிட், கிறிஸ், ரானன் பூசை உதவி புரிந்தனர். அருள்திரு லூர்துராஜ் அடிகளார் ஆங்கிலத்திலும், அருள்திரு. ஞானபிரகாசம் அடிகளார் தமிழிலும் மறையுரை ஆற்றினார்கள். மக்கள் அனைவரும் திருப்பலியில் நன்கு பங்கேற்றார்கள். பாடல் குழுவினர் பாடல்களை சிறப்பாக பாடினார்கள். திருப்பலி சுமார் 5:00 மணிக்கு முடிந்தது. திருப்பலி முடிந்தவுடன் 5:00 மணிக்கு தேநீர் வழங்கப்பட்டது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இந்த வருட நிகழ்ச்சி நிரலை திருமதி.வித்யா அவர்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளும் கூட்டு முயற்சியாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம். இதனால் நிறைய பேர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க
முடிந்தது. கலை நிகச்சிகளை திருமதி. வித்யாவும், திருமதி. கோல்டாவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். Logo போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பெற்றன. முதல் இடத்தை Chris Rozario பெற்றார். திரு. ஜோசப் அவர்கள் சிறப்பாக ஒலி-ஒளி அமைத்துக் கொடுத்தார். நிகழ்ச்சி நிரல்களும் அதில் பங்கேற்றவர்களின் விவரங்களும் தனி கோப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.
திரு. பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறியவுடன் உணவு பரிமாறப் பட்டது. இந்த வருடம் திருமதி. ஜூலியட் அவர்களும், திரு. வினோத் ராஜ் அவர்களும் உணவு menu-ஐ சிறப்பாக வடிவமைத்து, உணவகங்களிலிருந்து சரியான நேரத்தில் வரவழைத்து,
பரிமாறினார்கள். சுமார் இரவு 10:00 மணிக்கு Clubhouse-ஐ சுத்தம் செய்து முடித்தோம். இது ஒரு மறக்கமுடியாத விழாவாக இனிதே முடிந்தது .
The newly designed logo of the RTP Tamil Catholic Association was released by Rev. Fr. Gnanapragasam on the 19th of November 2017, after the monthly Holy Mass. The logo was received by the Association President Mr. Lazar.
Interpreting our logo
Our logo represents who we are. The globe in the logo in Indian tricolors symbolizes our ancestry and culture and where we came from. The church in US colors symbolizes the community we have built in the USA. Our families are at the center of our church and our faith; we have come together under one roof (the triangle area, where we live) and our religious identity (the cross) binds us together.
The final logo design is based on a logo competition held earlier in the year where many enthusiastic children participated. The winners of the logo competition will win prizes during our Christmas get-together.
A big thank you to all those who contributed into creating the logo.